• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க முடியாது – மு.க ஸ்டாலின்

April 4, 2017 தண்டோரா குழு

தமிழக விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க தமிழக அரசால் நிச்சயம் முடியாது என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க., செயல் தலைவருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசுகையில்

“சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலுக்காக அதிகாரிகள் மாற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச வேண்டும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்று விவசாயிகளை சந்திக்க வேண்டும். பிரச்னையை தீர்க்குமாறு பிரதமரை நேரில் சந்தித்து அவர் வலியுறுத்த வேண்டும். விவசாயிகள் பிரச்னையை தீர்க்க தமிழக அரசால் நிச்சயம் முடியாது. மக்களை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை.”

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க