• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சின்னத்தை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை – மதுசூதனன்

April 3, 2017 தண்டோரா குழு

ஆர்.கே. நகர் இடைதேர்தலில் இரட்டை மின் விளக்கு சின்னத்தை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை என்று மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக கட்சி பிளவுப்பட்டதால் ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12ம் தேதி இடைதேர்தல் நடக்கவிருக்கிறது. அத்தொகுதியில், அதிமுக அம்மா கட்சி வேட்பாளராக டிடிவி. தினகரனும், ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பாக மதுசுதனன் போட்டியிடுகின்றனர். தினகரனுக்கு தொப்பி சின்னமும் மதுசுதனுக்கு இரட்டை மின் விளக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இரட்டை மின் விளக்கு சின்னம் இரட்டை இலை சின்னம் போல் சித்தரிக்கப்படுவதாக மதுசூதனன் மீது தினகரன் தேர்தல் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். இந்த புகாருக்கு விளக்கம் தரவேண்டும் என்று மதுசுதனுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, அவர் பதில் கடிதம் ஒன்றை திங்கள்கிழமை(ஏப்ரல் 3) கொடுத்தார். தான் இரட்டை மின் விளக்கை தவறாக பயன்படுத்தவில்லை. ஆனால் டிடிவி. தினகரன் அதிமுக கட்சி பெயரையும் சமுக வலைதளங்களில் இரட்டை இலை சின்னத்தையும் பயன்ப்படுத்தி வருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க