• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விசா எண்ணிக்கையை குறைத்த சிங்கப்பூர் !

April 3, 2017 தண்டோரா குழு

இந்திய தகவல் தொழில்நுட்ப துறை ஊழியர்களுக்கான விசா எண்ணிக்கையை குறைத்து கொண்டது சிங்கப்பூர் அரசு.

சிங்கப்பூர் நாட்டில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணிபுரிய வரும் ஊழியர்களுக்கான விசா வழங்கும் எண்ணிக்கையை அந்நாட்டு அரசு குறைத்துள்ளது.

ஊழியர்களுக்கு விசா வழங்குவதை 2016- ம் ஆண்டின் துவக்கம் முதலே சிங்கப்பூர் அரசு படிப்படியாக குறைத்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் அரசு தரப்பில் இது குறித்து கூறுகையில் “இந்திய மென்பொருள் ஊழியர்களின் வருகை அதிகரிப்பதால், உள்ளூர் மக்களுக்கு வேலையில்லாமல் போகிறது.” என்றனர்.

மேலும் ஊழியர்களின் வருகையால் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக சிங்கப்பூர் அரசு கருதுவதே இதற்கு காரணம் என பொருளாதாரா வல்லுனர்கள் கருத்து கூறியுள்ளனர்.

அதே போல் சிங்கப்பூரை சேர்ந்த உள்நாட்டு பணியாளர்களை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிக்கு அமர்த்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு, ஹெச்.சி.எல், டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ, காங்னிசென்ட் மற்றும் எல்.அன்டு.டி ,இன்போடெக் ஆகிய நிறுவனங்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இந்திய நிறுவனங்களும் வேறு நாடுகளுக்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளன என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க