• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

என்னை வருணாகவே மாற்றிவிட்டார் மணிரத்னம் – கார்த்தி

April 2, 2017 தண்டோரா குழு

என்னை வருணாக மாற்றிவிட்டார் மணிரத்னம் என நடிகர் கார்த்தி கூறினார்.

இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி அதீதி நடிப்பில் உருவாகியுள்ள படம் காற்று வெளியிடை. இப்படம் வரும் 7ம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷனுக்காக நடிகர் கார்த்தி மற்றும் நடிகை அதீதி ஆகியோர் கோவை வந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி,

பத்து வருடங்களுக்கு முன்பு நான் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். இன்று அவரது படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.

காற்று வெளியிடை படத்தில் ஒரு காட்சியில் சின்னதாக சிரித்தேன். அப்போது மணிரத்னம் என்னை அழைத்தார். ‘இந்த படத்தில் கார்த்தி வரக்கூடாது. வருண் தான் எனக்கு வேண்டும்’ என்றார்.

அந்த அளவிற்கு என்னுடைய கதாபாத்திரத்தில் ஒரு இடத்தில் கூட கார்த்தி போன்று தெரிய கூடாது என்பதற்காக மணிரத்தினம் சார் என்னை வேறு ஒருவனாக மாற்றிவிட்டார்.

மேலும் , ரோஜா, பாம்பே போன்று காற்று வெளியிடை படத்தில் எந்த ஒரு சர்ச்சைக்குரிய கருத்துக்களும் இல்லை. இப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்தே படம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க