• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சேற்றில் சிக்கிய யானையை போராடி மீட்ட வனத்துறையினர்

April 1, 2017 தண்டோரா குழு

கோவை அருகே சேற்றில் சிக்கிய யானையை மீட்ட வனத்துறையினர் மீண்டும்வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

கோவை அடுத்து அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் உள்ளன. தற்போது இந்த பகுதியில் யானைகளின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் பருவ மழைகள் பொய்த்ததால் வனப்பகுதியில் கடும் வரட்சி நிலவுகிறது, இதனால் வனப்பகுதியில் உள்ள யானைகள் அவ்வப்போது குடிநீருக்காக வனத்தில் இருந்து வெளியேறி கிராம பகுதியில் புகுந்து சேதம் செய்து வருகிறது.

இந்நிலையில் வனப்பகுதியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக குட்டைகளில் நீர் உள்ளதால் வன விலங்குகள் அங்கு நீர் அருந்தி வருகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பாலமலை குஞ்சூர் வனப்பகுதியில் உள்ள குட்டை ஒன்றில் யானைகள் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்துள்ளது.

அப்போது,25 வயது மதிக்க தக்க பெண் யானை சேற்றில் சிக்கி வெளியே வரமுடியாமல் அலறியுள்ளது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது தாய் யானை சேற்றில் சிக்கி இருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது சேற்றில் சிக்கிய யானையின் அருகே அதன் குட்டிகள் உடன் இருந்ததால் மீட்கும் பணி பாதிக்கப்பட்டது.தொடர்ந்து பட்டாசு வெடித்தும், ஜே.சி.பி இயந்திரம் கொண்டு குட்டி யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டு தாய் யானை மீட்கப்பட்ட்து.

ஆனால் நீண்ட நேரம் தண்ணீரில் யானை இருந்ததால் அதன் உடல் நலம் பாதிக்கப்பட்டு எழுந்து நிற்க முடியாமல் படுத்துக்கொண்டது.

இதனால் வனத்துறை மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

பின்னர், யானை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கபட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க