• Download mobile app
09 May 2024, ThursdayEdition - 3011
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லாரிகள் வேலைநிறுத்தம் ; 250 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு

March 31, 2017 தண்டோரா குழு

சென்னையில் போக்குவரத்துத் துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், லாரிகள் வேலைநிறுத்தம் இன்றும் தொடர்கிறது. இதனால் நாளொன்று 250 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்கள் உள்ளிட்டவற்றை வாபஸ் பெற வேண்டும், சுங்கவரி கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும், காப்பீடு கட்டணத்தை குறைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் காரணமாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த 18 லட்சம் லாரிகள் இயங்கவில்லை. தமிழகத்தை பொருத்தவரை 4 லட்சம் லாரிகள் இயங்கவில்லை.
வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடர்வதால், காய்கறிகள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் நாளொன்று 250 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறுகையில் “ போக்குவரத்து துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது, கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இனிமேலும் கால அவகாசம் வழங்க முடியாது என்பதால் போராட்டம் தொடரும்.” என்றார் அவர்.

மேலும் படிக்க