• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீதிபதி கர்ணன் 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

March 31, 2017 தண்டோரா குழு

நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 4 வாரத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் பதில் தரவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீது உச்சநீதி மன்றம் அவதூறு வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் கர்ணன் நேரில் ஆஜர் ஆகாததால் உச்சநீதிமன்றம் கர்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் கர்ணன் இன்று நேரில் ஆஜரானார்.

நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 4 வாரத்தில் பதிலளிக்க நீதிபதி கர்ணனுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க