• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீதிபதி கர்ணன் 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

March 31, 2017 தண்டோரா குழு

நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 4 வாரத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் பதில் தரவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீது உச்சநீதி மன்றம் அவதூறு வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் கர்ணன் நேரில் ஆஜர் ஆகாததால் உச்சநீதிமன்றம் கர்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் கர்ணன் இன்று நேரில் ஆஜரானார்.

நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 4 வாரத்தில் பதிலளிக்க நீதிபதி கர்ணனுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க