• Download mobile app
18 Oct 2025, SaturdayEdition - 3538
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

March 30, 2017 தண்டோரா குழு

சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்களை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன் படி 044 – 25333093, 1800 4257012 மற்றும் 1913 என்ற எண்களை தொடர்புகொண்டு புகாரையோ அல்லது ஆலோசனையையோ தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்க விரும்பாதவர்கள் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையிலுள்ள புகார் மையத்தில் மாலை 5 மணி முதல் 6 வரை நேரடியாக சென்று புகார் தெரிவிக்கலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மேலும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க தனித்தனியே குழுக்கள் இயங்குவதாகவும்,பணப்பட்டுவாடவை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க