• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடிநீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதி மேம்படுத்தப்படும்- ஒ.பி.எஸ் அணியினர் தேர்தல் அறிக்கை

March 30, 2017 தண்டோரா குழு

சென்னை ஆர் கே நகரில் குடிநீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதி மேம்படுத்தப்படும். இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும் என்று ஒ.பி.எஸ் அணியினர் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சென்னை ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியின்(ஒ.பி.எஸ் அணியின்) தேர்தல் அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
100-க்கும் அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட, ஆர். கே. நகர் தொகுதி வேட்பாளர் மதுசூதனன் அதனை பெற்றுக்கொண்டார்

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

ஆர். கே. நகர் பகுதியில் தரமான சாலை, பாதுகாப்பான சாக்கடை வசதி செய்து தரப்படும். ஆரம்ப சுகாதார மையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க போதுமான ஊழியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கால் பாதிப்பு ஏற்படுவதால் அக்கிடங்கு அகற்றப்பட்டு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆர் கே நகரில் குடிநீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதி மேம்படுத்தப்படும். இளைஞர்களுக்கு சுய தொழிலை ஊக்குவிக்க தொழில் பயிற்சி அளிக்கப்படும். எழில் நகர் பகுதியில் சுற்றுலா மையம் அமைக்கப்படும். வீட்டு மனை இல்லாதவர்களுக்கு ஒவ்வொரு கட்டமாக, பட்டா வழங்கப்படும்.

24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் மற்றும் பாதுகாப்பான சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கப்படும். முதியோருக்கு ஓய்வூதியம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

500 குடும்பங்களுக்கு ஒரு நியாய விலை கடை அமைத்து தரப்படும்.

தற்போது உள்ள பள்ளிகள் போக மேலும 2 உயர்நிலைப்பள்ளிகள், ஒரு மேல்நிலைப்பள்ளி கொண்டு வரப்படும். நடமாடும் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் செயல்படுத்தப்படும் போன்ற பல அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க