• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னா கட்லெட்

March 30, 2017 samayalkurippu.com

தேவையான பொருட்கள்:

கருப்பு கொண்டைக்கடலை – 1 கப்
பிரெட் துண்டு – 4
பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
இஞ்சி துருவல் – சிறிதளவு
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
மல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள், ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். கொண்டைக்கடலையை தனியே வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

வதக்கிய கலவையுடன் பிரெட் துண்டு, வேக வைத்த கடலை, கரம் மசாலா சேர்த்து, சிறிது அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து இந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

பின்பு, நான் ஸ்டிக் தவாவில் உருண்டைகளை தட்டி இருபுறமும் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். தட்டில் வைத்து கொத்தமல்லி இலை தூவி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

மேலும் படிக்க