• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் முழுவதும் லாரி ஸ்டிரைக் தொடங்கியது

March 30, 2017 தண்டோரா குழு

லாரி உரிமையலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டண உயர்வு, ஆர்டிஓ அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று தென்மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்தது.

புதன்கிழமை நள்ளிரவு தொடங்கிய இந்த போராட்டம் லாரி உரிமையாளர் சம்மேளனம் மன்றும் தென் இந்திய மோட்டார் மோட்டார் கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களில் சுமார் 18 லட்சம் லாரிகள் இயங்காது என்றும் இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், மாநில அரசு தீர்க்கவேண்டிய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தக்கூட தமிழக அரசு முன் வரவில்லை என லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்க