• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உரிய நேரத்தில் நேரில் சந்திக்கலாம் இலங்கை தமிழர்களுக்கு ரஜினி அறிக்கை

March 29, 2017 தண்டோரா குழு

உரிய நேரம் வரும் போது நாம் நேரில் சந்திப்போம் என இலங்கை தமிழர்களுக்கு ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகா பெயரில் ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 9ம் தேதி இலங்கை யாழ்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள விருந்தார்.இதையடுத்து, திருமாவளவன் , வை.கோ, வேல்முருகன் ஆகியோர் ரஜினி இலங்கை செல்லக் கூடாது என அவரை வலியுறுத்தினார்.

இதையடுத்து அவரகளது கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினி தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார்.எனினும் ரஜினியின் அறிவிப்பு தங்களை ஏமாற்றமடைய செய்வதாகவும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு எதிராவும் இலங்கை தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்காக ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உங்கள் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.நம் வாழ்வில் நல்லவை தொடர்ந்து நடக்கட்டும்.உரிய நேரம் வரும் போது நாம் நேரில் சந்திப்போம் என ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க