• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.2,096.80 கோடி வழங்க பரிந்துரை

March 22, 2017 தண்டோரா குழு

தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.2,096.80 கோடி வழங்க, உள்துறை அமைச்சகத்திற்கு மத்திய குழு பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி குறித்து மத்திய குழுக்கள் கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆய்வு செய்தது. தொடர்ந்து தில்லி சென்ற குழு தமிழகத்தில் நிலவும் வறட்சி குறித்து ஆய்வு செய்தது.

இந்த ஆய்வின் அடிப்படையில் தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.2,096. 80 கோடி வழங்க உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இதே போல தமிழகத்திற்கு வறட்சி நிவராணமாக ரூ.1748.28 கோடி வழங்க துணைக்கமிட்டி உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யுள்ளது.

தமிழக அரசு வறட்சி நிவராணமாக ரூ.39656 கோடி கேட்டுள்ள நிலையில் மத்திய குழுவினரின் பரிந்துரை மிகவும் குறைவு என்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழத்திற்கு வறட்சி நிவராணமாக எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது குறித்து வியாழக்கிழமை நடைபெற இருக்கும் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்க