• Download mobile app
16 Apr 2026, ThursdayEdition - 3718
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி.யில் அரசு அலுவலகங்களில் பான்மசாலா, புகையிலை பயன்படுத்தத் தடை

March 22, 2017 தண்டோரா குழு

உத்தரப்பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பின்பு முதற்கட்டமாக, அனைத்து அமைச்சர்களும் 15 நாளில் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்றும்,மேலும் அமைச்சர்களிடம் உள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவைப் பிறப்பித்தார்.

இதனைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலைமைச் செயலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியின் போது அதிகாரிகள் பான்மசாலா, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்த கூடாது என்று அடுத்த உத்தரவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார்.

மேலும், இந்த உத்தரவை மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களிலும் பின்பற்றும்படியும், தவறும்பட்சத்தில் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க