• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எல்லைப்பகுதி மீண்டும் திறப்பு

March 22, 2017 தண்டோரா குழு

தீவிரவாத தாக்குதல் காரணமாக சுமார் ஒரு மாதம் மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதி சாலை செவ்வாய்க்கிழமை(மார்ச் 21) மீண்டும் திறக்கப்பட்டது.

இது குறித்து பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு அதிகாரி கூறியதாவது:

“பிப்ரவரி மாதத்தில் இஸ்லாமபாத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 7௦ பேர் உயிரிழந்தனர். இதற்கு ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வரும் தீவிரவாதிகள் தான் காரணம்.இதையடுத்து இரண்டு நாடுகளுகளின் எல்லைப்பகுதி மூடப்பட்டது.

பாகிஸ்தானின் டோர்க்ஹம் எல்லை பகுதியை மீண்டும் திறக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவு கடிதத்தை திங்கள்கிழமை(மார்ச் 2௦) பெற்றுக்கொண்டோம்.

இதன் விளைவாக வர்த்தகத்திற்காக செவ்வாய்க்கிழமை(மார்ச் 21) காலை 7 மணியளவில் எல்லைப்பகுதி சாலை திறக்கப்பட்டது.

எல்லையை திறந்த பிறகு, ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் எல்லையை கடந்து பாகிஸ்தான் நாட்டிற்குள் வந்தன. தெற்கு ஆசியாவின் பரபரப்பான வர்த்தகம் நடைபெறும் பகுதியான இந்த இரண்டு நாடுகளின் எல்லைகள் திறக்கப்பட்டது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க