• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்எஸ்எஸ் கையெழுத்து இயக்கம்: ‘முத்தலாக்’ முறைக்கு 10 லட்சம் பேர் எதிர்ப்பு

March 18, 2017 தண்டோரா குழு

மூன்று முறை, ‘தலாக்’ கூறி, விவாக ரத்து பெறும் முஸ்லிம்களின் நடைமுறையை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம் பிரிவு கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது.

முத்தலாக் முறையைத் தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “முத்தலாக் முறை, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி. அரசியல் சாசனத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்ட சமநிலைக்கு எதிரானது” எனக் கூறியிருந்தது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் (எம்.ஆர்.எம்.) ‘முத்தலாக்’ முறையை ஒழிக்கக் கோரும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.

அதில், பெரும்பாலான கையொப்பங்கள் முஸ்லிம் பெண்களுடையவை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்தியா முழுவதும் உள்ள பத்து லட்சம் முஸ்லிம்கள் கையெழுத்துப் போட்டிருப்பதாகவும் அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

மேலும் படிக்க