• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கார் மோதி தீப்பிடித்ததில் கார் பந்தய வீரர் அஸ்வின், மனைவி பலி

March 18, 2017 தண்டோரா குழு

பந்தய கார் வீரர் அஸ்வின் சுந்தர் சென்ற கார் மரத்தின் மீது மோதி தீப்பிடித்ததில், அவரும் அவரது மனைவியும் அங்கேயே உயிரிழந்தனர்.

சென்னையைச் சேர்ந்த கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர். அவர் தனது மனைவி நிவேதாவுடன் சனிக்கிழமை அதிகாலையில் பட்டினம்பாக்கம் அருகே சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். கார் அதிவேகமாக சென்றதாகக் கூறப்படுகிறது.

கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் மரத்தின் மீது மோதியது. இதனால் கார் திடீரன்று தீப்பிடித்து எரிந்தது. கார் எரிவதைப் பார்த்த சிலர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். அதன் பின் காரிலிருந்து இருவரையும் மீட்டபோது, அவர்கள் தீயில் கருகி இறந்துவிட்டனர் என்பது தெரிந்தது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஸ்வின் சுந்தர் சமீபத்தில் நடைபெற்ற தேசிய கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்றவர். அவரது மனைவி சென்னை தனியார் மருத்துவமனையில் மருத்துவர்.

இதனிடையே சாலைத் தடுப்பினால் நிலை தடுமாறிய கார் மரத்தின் மீது மோதியதால் இந்த தீ விபத்து நேர்ந்திருக்கக் கூடும் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், போலீசார் புலன்விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க