• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் வெற்றி

March 16, 2017 தண்டோரா குழு

கோவா சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் அரசு வெற்றி பெற்றதாகப் பேரவைத் தலைவர் அறிவித்தார்.

கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் மகாராஷ்டிர கோமந்தக் கட்சி, சுயேச்சைகள் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியமைக்க முடிவு செய்தது. ஆனால், கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது.

ஆனால், மனோகர் பாரிக்கர் பதவியேற்பதற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. ஆனால், சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மனோகர் பாரிக்கர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மனோகர் பாரிக்கர் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது மனோகர் பாரிக்கர் அரசுக்கு ஆதரவாக 22 உறுப்பினர்கள் வாக்களித்தனர். காங்கிரஸ் கட்சிக்கு 16 பேர் மட்டுமே ஆதரவு அளித்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் விஸ்வஜித் ராணே வெளிநடப்பு செய்தார். இதனால், மனோகர் பாரிக்கர் அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாகச் சட்டப் பேரவைத் தலைவர் அறிவித்தார்.

மேலும் படிக்க