• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய வாகனங்களை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம்

March 15, 2017 தண்டோரா குழு

புதிய வாகனம் பதிவு செய்வதற்கு ஏப்ரல் 1 ம் தேதி முதல் ஆதார் எண் மற்றும் பான் கார்டு, கைபேசி எண் கட்டாயம் ஆகியவை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துத் துறை ஆணையாளர் தயானந்த் கட்டாரியா கூறுகையில்,

“புதிய இரு சக்கர வாகனம், கார் போன்றவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு இதுவரையில் இருப்பிடச் சான்றாக ரே‌ஷன் கார்டு, மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்தன.

இனி, வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஆதார் அட்டை, பான் கார்டு கைபேசி எண் போன்ற ஆவணங்களை வழங்கினால் மட்டுமே புதிய வாகனங்களைப் பதிவு செய்ய முடியும். மேலும், இது தொடர்பாக அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது”. என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க