• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அந்தமான் நிக்கோபார் தீவில் 5.9 ரிக்டர் அளவு மிதமானநிலநடுக்கம்.

March 14, 2017 தண்டோரா குழு

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) 5.9 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்படவில்லை.

தேசிய நிலநடுக்கம் பற்றிய ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “நிக்கோபர் தீவுகளின் பூமிக்கடியில் 1௦ கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு, செவ்வாய்க்கிழமை காலை 8.21 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவு கோலாகப் பதிவாகியுள்ளது. சுனாமி ஏற்படும் அளவிற்கும் இந்த நிலநடுக்கம் பயங்கரமானதல்ல. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் குறித்தோ பொருட்சேதம் குறித்தோ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை” என்று தெரிவித்தது.

அதே போல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா என்னும் இடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.48 மணிக்கு 3.6 ரிக்டர் அளவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ஏற்படும் நேரங்களில், அண்டை மாநிலங்கள் அல்லது நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க, எச்சரிக்கை மையத்தை இந்தியா கட்டியெழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க