• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூலிப்படையால் எனக்கு மிரட்டல் – ஜெ, தீபா

March 13, 2017 தண்டோரா குழு

கூலிப்படைகள் மூலம் தனக்கு மிரட்டல் வருவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா திங்கள்கிழமை (மார்ச் 13) திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவருடைய அண்ணன் மகள் தீபா “எம்.ஜிஆர். அம்மா தீபா பேரவை” என்னும் புதிய அமைப்பைத் தொடங்கி, அதன் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். ஆர்.கே. நகர் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் இடைதேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில், மெரினா கடற்கரையில் ஜெயலலிதா சமாதி அருகில் ஞாயிற்றுக்கிழமை அமர்ந்து தியானம் செய்தார்.

பின்னர், “நான் அரசியலுக்கு வந்தது முதல் கூலிப்படைகள் மூலம் எனக்கு மிரட்டல் வருகின்றன. நான் ஆர்.கே. நகர் சட்டப் பேரவைத் தொகுதியில் போடியிடுகிறேன் என்று அறிவித்த பிறகு எனக்கு மறைமுகமாக பல்வேறு தொல்லைகள் கொடுத்து வருகின்றனர். என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. என்னைக் கொலைசெய்து விடுவதாக மிரட்டுகின்றனர். அவர்கள் யாரென்றே தெரியவில்லை. ஆனால், இதற்கெல்லாம் நான் பயப்படபோவதில்லை” என்றார்.

மேலும் படிக்க