• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்

March 10, 2017 தண்டோரா குழு

உடல்நலக் குறைவு காரணமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மருத்துவ சோதனைக்காக வெளிநாடு பயணமானார். ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தலின் முடிவுகள் வெளியாகும்போது அவர் இந்தியாவில் இருக்க மாட்டார்.

2௦11ம் ஆண்டு வெளியே தெரிவிக்கப்படாத நோய்க்கான சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு பயணமானார். அதைத் தொடர்ந்து, அவ்வாறு அடிக்கடி அவர் வெளிநாட்டுக்குப் பயணமாவது வழக்கம்.

2௦16ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாராணசியில் நடைபெற்ற ஒரு பேரணியின்போது அவரது உடல் நலம் குன்றியது. அங்கிருந்து தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் மற்றும் உத்தரா கண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் அவர் பங்கேற்கவில்லை.

“சோனியா காந்தி வெளிநாடு செல்லும் முன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அவருடைய மகனும் அதன் துணைத் தலைவருமான ராகுல் காந்தியுடனும் ஆலோசனை நடத்தியுள்ளார். அவர் இல்லாத நாட்களில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்று கட்சியை வழிநடத்துவார். சோனியா காந்தி 2 அல்லது 3 நாட்கள் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்புவார்” என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க