• Download mobile app
30 May 2026, SaturdayEdition - 3762
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுவிட்சர்லாந்து நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் பலி, ஒருவர் படுகாயம்

March 10, 2017

“சுவிட்சர்லாந்து நாட்டில் பேசல் நகரில் உள்ள சுவிஸ் காபேவில் வியாழக்கிழமை (மார்ச் 9) நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் உள்ளூர் நேரத்தின்படி இரவு 8:15 மணியளவில் நடந்தது. காபே 56 எனப்படும் தேநீர் விடுதிக்குள் நுழைந்த இரண்டு ஆண்கள் தங்களிடமிருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கிச் சரமாரியாகச் சுட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

“வழக்கறிஞர் அலுவலக குற்ற புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரனையில் காபே 56 விடுதிக்குள் நுழைந்த இரண்டு ஆண்கள் தங்களிடமிருந்த துப்பாக்கியால் சுட்டதை உறுதி செய்துள்ளது.சுட்ட இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்” என்று அதிகாரிகள் கூறினர்.

சம்பவ இடத்தின் அருகில் உள்ள சாலை மூடப்பட்டு, போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் நடப்பது சுவிட்சர்லாந்து நாட்டில் மிகவும் அரிதான சம்பவம் ஆகும்.

ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் மட்டும் துப்பாக்கியைத் தங்கள் வீட்டில் வைத்திருக்க அனுமதியுண்டு. வீட்டில் நடைபெறும் சில அசம்பாவிதங்களுக்கு வீட்டில் வைத்திருக்கும் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் வீட்டில் துப்பாக்கி வைத்திருக்க அனுமதிப்பதில் பல சர்ச்சைகள் எழுகின்றன.

“இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துப்பாக்கியால் சுட்ட இருவரையும் விரைவில் கைது செய்வோம்” என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க