• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த விதியில் இடமில்லை”

March 10, 2017 தண்டோரா குழு

சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவதற்கு சட்டப் பேரவை விதிகளில் இடமில்லை என்று தமிழக சட்டப் பேரவையின் செயலர் ஜமாலுதீன் தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரியும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை வெளியேற்றியதை எதிர்த்தும், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொர்பாக பேரவைச் செயலர் ஜமாலுதீன் பதில் மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

அதில், “தமிழக சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு பேரவை விதிகளில் இடமில்லை. சட்டப் பேரவையில் தி.மு.க., உறுப்பனர்கள் அமளியில் ஈடுபட்டதால்தான் வெளியேற்றப்பட்டனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க