ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாகக் கூறி, 6௦க்கும் மேற்பட்ட தமிழர்களை ஆந்திர மாநில வனத்துறை மற்றும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் வைத்திருந்த ரூ.8 கோடி மதிப்பிலான 8 டன் செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்ததாகவும் ஆந்திர மாநில காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆந்திர மாநிலம் வனத்துறை பகுதியான கடப்பாவில் வழக்கமான ரோந்துப் பணியில் இருந்தபோது, வனப்பகுதிக்குள் 60க்கும் மேற்பட்டோர் மரம் வெட்டுவதைப் பார்த்து வனத்துறை அவர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். பின்னர் அவர்களை விசாரித்ததில் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது” என்றார்.
இச்சம்பவத்தால் மேலும் சிலர் வனப் பகுதிக்குள் பதுங்கியிருக்ககூடும் என்பதால் வனப் பகுதிக்குள் ஆந்திர வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக, ஆந்திர எல்லைப் பகுதியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்