தேவையான பொருட்கள்
பாலக் கீரை – ஒரு கட்டு.
சின்ன உருளைக்கிழங்கு – பன்னிரண்டு (வேகவைத்து தோலுரித்தது).
எண்ணெய் – இரண்டு தேகரண்டி.
விழுதாக அரைத்த வெங்காயம் – ஒன்று.
விழுதாக அரைத்த தக்காளி – இரண்டு.
பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது).
இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்.
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்.
தனியாதூள் – கால் டீஸ்பூன்.
சீரக தூள் – கால் டீஸ்பூன்.
மிளகு தூள் – கால் டீஸ்பூன்.
கரம் மசாலா – கால் டீஸ்பூன்.
உப்பு – தேவைகேற்ப.
சக்கரை – அரை டீஸ்பூன்.
தாளிக்க:
எண்ணெய் – அரை டீஸ்பூன்.
கடுகு – சிறிதளவு.
உளுத்தம் பருப்பு – சிறிதளவு.
காய்ந்த மிளகாய் – இரண்டு.
பெருங்காயம் – சிறிதளவு.
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வேகவைத்து தோலுரித்த சின்ன உருளைக்கிழங்கு, வெங்காய விழுது, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், தனியாதூள், சீரக தூள், மிளகு தூள், கரம் மசாலா, தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.பாலக் கீரை அரைத்த விழுது சேர்த்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.பிறகு, எறக்கி சப்பாத்தி உடன் பரிமாறவும்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு