• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரகசிய வாக்கெடுப்பு – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோரிக்கை

February 17, 2017 தண்டோரா குழு

தமிழக சட்டப் பேரவையில் சனிக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும்போது, பேரவை உறுப்பினர்களிடம் ரகசியமான முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஓ.பி.எஸ். ஆதரவான முன்னாள் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைத் தலைவர் தனபாலை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினர்.

முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், எம்.எல்.ஏ-க்கள் “மாஃபா” பாண்டியராஜன், செம்மலை ஆகியோர் சட்டப் பேரவைத் தலைவர் தனபாலை வெள்ளிக்கிழமை காலையில் சந்தித்தனர்.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சனிக்கிழமை சட்டப் பேரவையில் நடைபெறும்போது ரகசிய நம்பிக்கை வாக்கெடுப்பு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க