• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தையைக் கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை

February 17, 2017 தண்டோரா குழு

தாயே குழந்தையைக் கொலை செய்த வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம் செல்வபுரம் அருகே இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த்குமார். இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் ஒரு ஹரிவர்ஷா என்கிற பெண் குழந்தை இருந்தது.

கணவன் – மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. அதன் காரணமாக இருவரும் எப்போதும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு திவ்யா தனது பெண் குழந்தை ஹரிவர்ஷாவைத் தூக்கிக்கொண்டு தனது தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அருகில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி வீட்டில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்னையில் தனது மகள் ஹரிவர்ஷாவைத் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்றார். இந்த சம்பவம் தொடர்பாக திவ்யா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கோவை மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குழந்தையின் தாய் திவ்யாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் வெள்ளிக்கிழமை உத்திரவிட்டார். இதனையடுத்து திவ்யா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க