• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அஞ்சலி செலுத்திவிட்டு சபதம் செய்த சசிகலா

February 15, 2017 தண்டோரா குழு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, சபதம் செய்தார்.

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உட்பட அவரது உறவினர்கள் மூன்று பேரையும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்காக சென்னை போயஸ் கார்டன் வேதா இல்லத்திலிருந்து புறப்பட்ட சசிகலா, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது, ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மவுனமாக சிறிது விநாடிகள் தியானம் செய்தார். அதன் பின் நினைவிடத்தைச் சுற்றி வந்த சசிகலா, ஜெயலலிதா சமாதி மீது 3 முறை அடித்து, மிகவும் ஆக்ரோஷமாக சபதம் செய்தார். பின்னர் யாரிடமும் ஏதுவும் பேசாமல் வேகமாக பெங்களூரு கிளம்பிச் சென்றார்.

அதைப் பார்த்து கொண்டிருந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர்.

மேலும் படிக்க