• Download mobile app
20 Sep 2026, SundayEdition - 3875
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடத்தப்பட்ட 13 எகிப்தியர்கள் விடுதலை

February 15, 2017 தண்டோரா குழு

லிபியாவில் இருந்து பல்வேறு காரணத்திற்காக கடத்தப்பட்ட 13 எகிப்தியர்களை விடுதலை செய்ததாக அந்நாடு அறிவித்துள்ளது.

2௦11ம் ஆண்டு முதல் பல்வேறு குழப்பம் மற்றும் பாதுகாப்பு பிரச்சனை நிறைந்த பகுதியான கிழக்கு லிபியாவிற்கு 13 எகிப்தியர்கள் கடத்தப்பட்டனர். புதன்கிழமை(பிப்ரவரி 15) விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று எகிப்து ராணுவம் அறிவித்துள்ளது.

எகிப்து ராணுவத்தின் செய்திதொடர்பாளர் கர்ணல் தமர்-அல்-ரிபாய் கூறுகையில், “வடகிழக்கு லிபியாவின் அஜ்டபியா பகுதியை சேர்ந்த ஆயுதமேந்திய கும்பல் 13 எகிப்தியரை கடத்தியது” என்றார்.

எகிப்து ராணுவ அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “லிபியாவின் ராணுவ ஜெனரலுடன் ஒருங்கிணந்து செயல்பட்டதால் அவர்களுடைய விடுதலை சாத்தியமானது” என்று கூறியுள்ளது.

2௦11ல் நடந்த புரட்சியில் நீண்ட நாள் சர்வாதிகாரியாக இருந்த மோமர் கடாஃபி போராளிகளின் உதவியுடன் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அதன் பிறகு லிபியா பல அரசியல் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளில் சிக்கி தவித்தது.

2௦15ம் ஆண்டு ஐஎஸ் குழு எகிப்தை சேர்ந்த 21 கிறிஸ்தவர்களின் தலை வெட்டப்படும் காணொளியை வெளியிட்டது. இந்த அட்டூழியத்திற்கு பதிலடி தர ஐஎஸ் குழு இருந்த பகுதிகளில் விமானத் தாக்குதல்களை எகிப்து நடத்தியது. இதையடுத்து லிபியாவிற்கு புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான எகிப்து மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க