• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டம் ஒழுங்கு: ஆளுநரிடம் முதல்வர் விளக்கம்

February 14, 2017 தண்டோரா குழு

தமிழகத்தின் சட்டம்ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தொலைபேசி மூலம் ஆளுநருக்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்து வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து கூவத்தூர் விடுதியில் உள்ள எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்க முதலமைச்சர் ஓ. பன்னீர் செவ்லத்தின் ஆதரவாளரான அமைச்சர்கள் குழு சென்றது.

ஆனால் அவர்கள் கோவளம் பகுதியிலேயே காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து தொடர்ந்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூவத்தூரில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார். இதனால், கூவத்தூர் வழியாக செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

இதன் காரணமாக கூவத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தொலைபேசியில் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க