• Download mobile app
28 Apr 2026, TuesdayEdition - 3730
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூவத்தூரில் 144 தடை உத்தரவு அமல்

February 14, 2017 தண்டோராகுழு

அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவுவதால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதைத் தொடர்ந்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூவத்தூர் வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. இதனால், கூவத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கூவத்தூர் பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவுவதால் கல்பாக்கம் முதல் கூவத்தூர் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி அறிவித்துள்ளார்.

இதனால், கூவத்தூர் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

மேலும் படிக்க