• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை

February 13, 2017 தண்டோரா குழு

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திங்கட்கிழமை தலைமைச் செயலகம் சென்றார். அங்கு அதிகாரிகளுடன் தமிழக அரசு நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்திருப்பதை முன்னிட்டு அங்கு காவல் துறையினரால் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டன.

முன்னதாக அவர், “நான் தலைமைச் செயலகம் சென்று வழக்கமான பணியில் ஈடுபடுவேன்” என்று கூறியிருந்தார். தொண்டர்களின் அணிவகுப்போடு தலைமைச் செயலகம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் தலைமைச் செயலகம் திங்கட்கிழமை வந்திருந்தார். ஆனால், அவர் முதலமைச்சர் வருகைக்கு முன்பே தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

மேலும் படிக்க