• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வறட்சி குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

February 11, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், செட்டிபாளையம் ஊராட்சி பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள், சோளம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

அப்போது விவசாயிகளுடன் அவர் பேசுகையில்

“ தங்கள் பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதன் விபரங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டதை அலுவலர்களிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதில் பெயர் திருத்தம், மற்ற பதிவுகள் விடுப்பட்டிருந்தால் அதை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும்.

பண ஒதுக்கீடு வந்த பின்னர் பெயர் மாற்றம் செய்ய இயலாது என்பதை விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான தீவணம் மற்றும் வைக்கோல் வழங்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. விரைவில் தீவனங்கள் வழங்கப்படும்.” என்றார்.

அதன் பின் கோவை மாவட்டம் ஓராட்டுக்குப்பை ஊராட்சி, கிணத்துக்கடவு வட்டம் அரசம்பாளையம் ஊராட்சி, பானப்பட்டி ஊராட்சி, அக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி பகுதிகளுக்குச் சென்று வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வின் போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் (பொறுப்பு) திரு.சுரேஷ், மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க