• Download mobile app
13 Sep 2026, SundayEdition - 3868
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதன்முறையாக ‘ஆதி சக்தி கண்காட்சி 2026’ தொடக்கம்!

September 13, 2026 தண்டோரா குழு

பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கோவையில் முதன்முறையாக ‘ஆதி சக்தி கண்காட்சி 2026’ தொடங்கப்பட்டுள்ளது.

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில், சிவா அறக்கட்டளை மற்றும் பழங்குடியினர் முன்னேற்ற அமைப்பு சார்பில் நடைபெறும் இக்கண்காட்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பழங்குடியின மக்கள் தயாரிக்கும் பல்வேறு பொருட்களுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண்களின் திறமைகள், சாதனைகள் மற்றும் தொழில் முயற்சிகளை வெளிப்படுத்துவதுடன், அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலை, கைவினைப் பொருட்கள், இயற்கை சார்ந்த தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.இதன் மூலம் அவர்களின் உழைப்பையும் திறமைகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பார்வையாளர்களை கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருவதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் சிவா தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களின் திறமைகளையும் அவர்களின் தயாரிப்புகளையும் அறிந்து கொண்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்கள் திரளாக கண்காட்சிக்கு வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க