• Download mobile app
01 Aug 2026, SaturdayEdition - 3825
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகல கொண்டாட்டம்

August 1, 2026 தண்டோரா குழு

கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியின் 10-ஆம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மெர்சி ஊமன், பள்ளி தாளாளர் பிலிப் ஆர்.ஜே.பவுலர், கௌரவ பொருளாளர் டாக்டர் ஜேம்ஸ் ஜே.ஞானதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தொடக்கமாக இறை வணக்கம், பள்ளி பாடல் பாடப்பட்டது.ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ முதல்வர் ஐலின் ஜெத்ரோ வரவேற்புரையாற்றி ஆண்டு அறிக்கை வாசித்தார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள்,பள்ளியின் பத்து ஆண்டு சாதனைகளை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின.பின்னர் சிறப்பு விருந்தினர் பிலிப் ஆர்.ஜே.பவுலர் தனது உரையில், ஸ்டேன்ஸ் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் நிறுவனர் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் குறித்து வரலாற்றுச் சம்பவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இளம் வயதில் இந்தியா வந்த ராபர்ட் ஸ்டேன்ஸ்,கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இறங்கியபோது, இப்பகுதியில் போதுமான கல்வி நிறுவனங்கள் இல்லாததை உணர்ந்தார். அந்தக் குறையை போக்கும் நோக்கத்தில்தான் ஸ்டேன்ஸ் பள்ளி உருவாக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

மேலும்,கோவை மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஸ்டேன்ஸ் நூற்பாலை மற்றும் ஸ்டேன்ஸ் மோட்டார்ஸ் ஆகிய தொழில் நிறுவனங்களையும் அவர் தொடங்கினார்.அதன் மூலம் கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்” என்ற பெருமையைப் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்த முன்னோடி யாக ராபர்ட் ஸ்டேன்ஸ் திகழ்ந்தார் என்றும் பிலிப் ஆர்.ஜே.பவுலர் குறிப்பிட்டார். அத்துடன், அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு மோட்டார் தொழில்நுட்பத்தின் மீது கொண் டிருந்த ஆர்வத்தையும் திறமையையும் ஊக்குவித்தவர்களில் முக்கியமானவர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்றும், தொழில் வளர்ச்சியும் கல்வி வளர்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்திருக்க வேண்டும் என்பதே அவரது பார்வை என்றும் மாணவர்க ளுக்கு எடுத்து ரைத்து அவர் சிறப்புரையாற்றினார்.

மாணவர்களின் எதிர்கால கல்வி மற்றும் வாழ்க்கைப் பயணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்த சிறப்பு விருந்தினர், விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் உயர்ந்த சாதனைகளைப் படைக்க முடியும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து,பொதுத்தேர்வுகள் மற்றும் கல்வியில் சிறப்பான மதிப் பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.விழாவில் பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டாக்டர் விஜிலா கென்னடி, டாக்டர் சுசீதா ராமச்சந் திரன், தலைமை நிர்வாக அதிகாரி வி.எம்.ஜான், ஆங்கிலோ -இந்தியன் பள்ளி முதல்வர் பி.ஏ.ஜான் ஸ்டீபன், ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ பள்ளி முதல்வர் ஜெனட் ஜெய்பிரகாஷ் மற்றும் ஸ்டேன்ஸ் இன்டர்நேஷனல் முதல்வர் ஜார்ஜினா உட்படப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திரளாகக் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க