June 15, 2026
தண்டோரா குழு
இந்தியத் திருமணங்களின் பாரம்பரிய செழுமை, இந்திய நெசவுத் துணிகளின் காலத்தால் அழியாத அழகு மற்றும் நவீன பெண்மையின் தனித்துவத்தை முன்னிறுத்தும் வகையில், தொழில்முனைவோர் ஸ்வர்ணமுகி ரகுபதி நடத்தும் பிரேமம் சில்க்ஸ் நிறுவனத்தின் சிறப்பு திருமணத் தொகுப்பு கண்காட்சியான ‘பிரேமம்-இன் கல்யாண வைபோகம்’ கோவையில் இன்று (ஜூன் 15) துவங்கியது.இக்கண்காட்சி நாளை 16-ஆம் மாலை 8.00 மணி வரை நடைபெறுகிறது.
கோவை ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலின் செனட்டர் 1 அரங்கில் நடைபெறும் இந்த இருநாள் நிகழ்ச்சியை, பிரிகால் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் சிறுதுளி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜூன் 15-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாடல், உள்ளடக்க உருவாக்குநர் மற்றும் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2021 போட்டியின் இரண்டாம் இடம் பெற்ற தரிணி கலிங்கராயரும் பங்கேற்றார்.
பெண்களின் அழகு, ஆற்றல் மற்றும் தனித்துவத்தை கொண்டாடும் நோக்கத்துடன் செயல்படும் பிரேமம் சில்க்ஸ், ‘கல்யாண வைபோகம்’ நிகழ்வின் மூலம் மணப்பெண்கள், குடும்பத்தினர் மற்றும் சேலை விரும்பிகளுக்காக பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமணச் சேலைத் தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது.
இந்தத் தொகுப்பில் பனாரஸ் மற்றும் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் நவீன வடிவமைப்புகளுடன் இடம்பெற்றுள்ளன. மேலும், பந்தினி பைதானி சேலைகள், ஆர்கன்சா எல்லைகளுடன் நெய்யப்பட்ட பனாரஸ் பட்டுச் சேலைகள் உள்ளிட்ட பாரம்பரிய கைவினைக் கலையை புதுமையுடன் வெளிப்படுத்தும் சிறப்பு வடிவங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
இதுகுறித்து பிரேமம் சில்க்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்வர்ணமுகி ரகுபதி கூறியதாவது:
“பிரேமம் சில்க்ஸ் என்பது ஒரு வணிக நிறுவனம் மட்டுமல்ல் அது ஒரு உணர்வு. ஒவ்வொரு பெண்ணின் உள்ளார்ந்த தெய்வீகத்தையும் கொண்டாடும் முயற்சியாக இது உருவாகியுள்ளது. பாரம்பரியம், கைவினைத்திறன் மற்றும் உணர்வுகளை தாங்கிய ஒவ்வொரு நெசவுத் துணியும் பெண்களுக்கு அழகு, தன்னம்பிக்கை மற்றும் வேர்களுடன் இணைந்த உணர்வை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
ரெசிடென்சி டவர்ஸின் நேர்த்தியான சூழலில் நடைபெறும் இந்தக் கண்காட்சி, மணமகள்கள், திருமணக் கொள்முதல் செய்பவர்கள், சேலை ஆர்வலர்கள் மற்றும் கைவினைப் பொருட்களை விரும்புவோருக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பார்வையாளர்கள் சேலைத் தொகுப்புகளை பார்வையிடுவதுடன், நிறுவன நிறுவனர் ஸ்வர்ணமுகி ரகுபதியுடன் கலந்துரையாடி, பாரம்பரியமும் நவீன நேர்த்தியும் சங்கமிக்கும் பிரேமம் சில்க்ஸின் தனித்துவத்தை அனுபவிக்கலாம்.