• Download mobile app
28 Jan 2026, WednesdayEdition - 3640
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் சாம்பியன் ஆன காரமடை கராத்தே வீரர்கள்

January 28, 2026 தண்டோரா குழு

கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, காரமடையை சேர்ந்த கராத்தே வீரர்கள் வென்றனர்.

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 50 காரத்தே வீரர்கள், கடந்த வாரம் கேரளா மாநிலம் கொச்சியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் குமிட்டி, கட்டா போன்ற பிரிவுகளில் ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் உள்ளிட்டவை கீழ் கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில் காரமடை காரத்தே வீரர்கள் சுமார் 50 வெற்றி கோப்பைகளை பெற்று, ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்று, சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு, காரமடை அருகே உள்ள சிக்காரம்பாளையத்தில் பெற்றோர்கள் பாராட்டு விழா நடத்தினர்.இதில் வெற்றி பெற்று கோப்பைகளுடன் வந்த வீரர்களை, பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வரவேற்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் படிக்க