• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற 37 வது மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

December 6, 2025 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற 37 வது மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கராத்தே கோயமுத்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டி கோவை இந்துஸ்தான் கல்வி வளாகத்தில் நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதில்,ஆறு வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

வயது மற்றும் எடைப்பிரிவுகளில், கட்டா மற்றும் குமித்தே ஆகிய போட்டிகள் நடைபெற்றன.மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் கோவை,மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

இதில் வெற்றி பெறும் வீரர்,வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளர் வீரமணி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,தமிழக அரசு தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் ஊக்குவித்து வருவதாக கூறிய அவர்,இதனால் தேசிய,சர்வதேச போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்பது அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்…

மேலும் படிக்க