• Download mobile app
28 Jun 2026, SundayEdition - 3791
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற பெரிதினும் பெரிது கேள் : தொழில் முனைவோருக்கான மாபெரும் வழிகாட்டும் நிகழ்வு

October 25, 2025 தண்டோரா குழு

தற்போது தொழிலில் யாரெல்லாம், எப்படி எல்லாம் முன்னேற்றம் அடைந்துள்ளனர்; அவர்கள் எப்படி வெற்றி பெற்றனர் என அறிந்து கொள்ள விரும்பும் சாதிக்க விரும்பும் தொழில் முனைவோருக்கான மாபெரும் நிகழ்ச்சியை, மிஸ்ஸன் மில்லியனர் கிளப் கோவையில் இன்று நடத்தியது.

தொழில் முனைவோர், எப்படி ஒரு தொழிலை துவங்குவது, அதை எவ்வாறு வளர்ச்சி பெறச் செய்வது மற்றும் எப்படி மாபெரும் நிறுவனமாக மாற்றுவது என புரிந்து கொள்ள வழிகாட்டும் நிகழ்ச்சியாக இது திகழ்ந்தது.

தொழில் நகரமான கோவையில், எப்படியெல்லாம் தொழிலில் பலர் முன்னேற்றம் அடைந்தனர், அவர்களது அயராது உழைப்பு, செயல்திறன், வகுத்த திட்டங்கள் எல்லாவற்றையும் விளக்கினர். வெளிப்படையாக தங்களது வெற்றியை சொல்லும் நிகழ்வு கோவையில் நடைபெற்றது. அக்டோபர் 25-ல் நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றோர், புதிய தொழிலை தொடங்கவும், தற்போதுள்ள தொழிலில் பன்மடங்கு வளர்ச்சி காணவும் பயனுள்ளதாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

இந்நிகழ்வில் தொழில் முனைவோர் மட்டுமின்றி, தன்னம்பிக்கை பேச்சாளர்களான சிந்தனைக் கவிஞர் கவிதாசன், பிரபல பட்டிமன்ற பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், சுகி சிவம், சார்லஸ் காட்வின் மற்றும் சி கே குமரவேல் (நேச்சுரல்ஸ் ஸ்பா) தங்கமயில் ஜுவல்லரி நிறுவனர், அணில் சேமியா நிறுவனர் திரு சுகுமார் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

முன்னதாக விழாவின் முக்கிய நிகழ்வாக ஞான சஞ்சீவன குருகுலத்தின் நிறுவனர் திரு ஸ்ரீ சசிகுமார் எழுதிய அற்புதங்கள் படைக்கும் மில்லியனர் மனநிலை என்ற தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை ஸ்ரீ சசிகுமார் வெளியிட சிந்தனைக் கவிஞர் கவிதாசன் பெற்றுக்கொண்டார்.

கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நாள் முழுவதும் நடந்த நிகழ்வில் பலர் பங்கேற்று பயன் பெற்றார்கள்.

மேலும் படிக்க