• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆனைகட்டியில் உள்ள நீலகிரி உயிர்கோளம் இயற்கை பூங்காவில் தேசிய வனவிலங்கு வார விழா

October 3, 2025 தண்டோரா குழு

வனவிலங்குகள் மற்றும் இயற்கை வாழிடங்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில், தேசிய வனவிலங்கு வாரம் ஒவ்வொரு ஆண்டும் அக்.2 ம் தேதி முதல் 8ம் தேதி வரை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு,கோவை அருகிலுள்ள ஆனைக்கட்டி பகுதியில் அமைந்துள்ள நீலகிரி உயிர்கோளம் இயற்கை பூங்காவில்,
தேசிய வனவிலங்கு வார விழா கொண்டாடப்பட்டது.விழாவின் ஒரு பகுதியாக, பறவைகளை பார்வையிடுதல், வனவிலங்கு புகைப்படப் போட்டி, வனவிலங்கு புகைப்படம் தொடர்பான பயிலரங்கம் நடைபெற்றது.

இதில் பிரபல புகைப்படக் கலைஞர் ஹரிஷ் வெங்கட்ராமன் புகைப்படக்கலை முறைகள், நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வில் புகைப்படங்களின் பங்கு குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நீலகிரி உயிர்க்கோளம் இயற்கை பூங்காவனது,தாவரங்கள்,விலங்குகளின் வாழும் களஞ்சியமாகவும்,சுற்றுச்சூழல் கல்வி,ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த பொது விழிப்புணர்வை மேம்படுத்தும் மையமாகவும் செயல்படுகிறது.

மேலும் படிக்க