September 15, 2025
தண்டோரா குழு
சென்னைக்கு அடுத்தபடியாக முக்கிய நகரமாக பார்க்கப்படும் கோவையில், .கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய சுவையுடன்,தென்னிந்திய உணவு வகைகளை தனி ருசியுடன் வழங்கும் விதமாக அம்மணி மெஸ் எனும் புதிய உணவகம் துவங்கப்பட்டுள்ளது.
கோவை அவினாசி சாலை கோல்ட்வின்ஸ் பகுதியில் உள்ள ஆர்கேடியா ஓட்டல் ரூப் டாப்பில் வரும் 18 ஆம் தேதி முதல் செயல்பட உள்ள அம்மணி மெஸ் துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக,காவல் துறை அதிகாரிகள் அருளரசு மற்றும் அன்பு,ஜி.எஸ்.டி.கூடுதல் ஆணையர் ஸ்ரீ பாலாஜி ,கூட்டுறவு பதிவாளர் ராமகிருஷ்ணன்,சுங்க கண்காணிப்பாளர் மன்ஜித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அம்மணி மெஸ் உரிமையாளர்கள் மோதிலால் ராஜ் குமார் மற்றும் பாஸ்கர் ஆகியோர் கூறுகையில்,
வரும் 18 ஆம் தேதி முதல் செயல்பட உள்ள அம்மணி மெஸ் உணவத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலைங்களில் உள்ள புகழ் பெற்ற சைவ,அசைவ உணவுகளையும் அங்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மசாலா மற்றும் பொருட்களை கொண்டு தலை சிறந்த உணவு கலைஞர்களால் தயாரிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
காலை மதியம், மற்றும் இரவு என மூன்று வேளை செயல்பட உள்ள இந்த மெஸ் நள்ளிரவு 2 மணி வரை சூடான உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என தெரிவித்தனர்.மேலும் வார இறுதி நாட்கள் உட்பட முக்கிய நாட்களில் ரம்மியமான சூழலில் லைவ் பேண்ட் எனும் மெல்லிசையுடன் உணவை வாடிக்கையாளர்கள் ரசித்து ருசிக்கலாம் என கூறினர்.
குறிப்பாக அம்மணி மெஸ் உணவகத்தில், அயிரை மீன் குழம்பு நல்லம்பட்டி சுக்கா, இறால் தொக்கு, குண்டூர் காயின் பரோட்டா, தேங்காய்பால் நெய் சோறு போன்றவை இங்கு கிடைக்கும் என குறிப்பிட்டனர்.