• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் கிறிஸ்டல் சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்

September 4, 2025 தண்டோரா குழு

லயன்ஸ் கிளப் ஆப் இன்டர்நேஷனல் மாவட்டம் 324 1D லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் கிறிஸ்டல் சார்பில் கோவை ஆர்.எஸ் புரம் மேற்கு ஆரோக்கிசாலை பகுதியில் அமைந்துள்ள Night shelter முதியவர் காப்பகத்திற்கு காலை உணவு வழங்கப்பட்டது.

இதனை அரிமா கண்ணன் மற்றும் இந்திரா கண்ணன் ஆகியோரின் மகள் மோனிகா மற்றும் மணிகண்டன் ஆகியோரின் திருமண நாளை முன்னிட்டு காலை உணவு ஏற்பாடு செய்தனர். இதில் 125க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

இதனை முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா பிகே ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதியோர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அரிமா ஜெகதீசன்,அரிமா டாக்டர் சாரதா, அரிமா சந்திரசேகர், அரிமா கண்ணன், அரிமா ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

லயன்ஸ் கிளப் கோயம்புத்தூர் ஜுபிடர் தலைவர் அரிமா டிஜிஎஸ் பொன்னம்பலம் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

மேலும் படிக்க