• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு அவகாசம்

January 30, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் காலஅவகாசம் அளித்துள்ளது.

தமிழகத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்குத் தடை விதிக்கக் கோரி, வழக்குரைஞர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி கவுல் தலைமையில் திங்கட்கிழமை (ஜனவரி 30) நடைபெற்றது. அப்போது வீட்டுமனைகளை வகைப்படுத்த, தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளைப் பத்திரப் பதிவு செய்ய, பதிவுத் துறைக்குத் தடை விதித்ததோடு தமிழக அரசுக்கு பிப்ரவரி 27 ம் தேதி வரை அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க