August 23, 2025
தண்டோரா குழு
PSG & சன்ஸ்’ அறக்கட்டளையின் கீழ் இயங்கும் PSG பார்மஸி கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா நேற்று PSG IMSR ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
17 முதல் மதிப்பெண் பெற்ற பட்டதாரிகள் மற்றும் 2 சிறந்த மாணவர்கள் (B. Pharm இன் சுரேகா மற்றும் Pharm.D இன் ஷிவ் சுந்தர்) உட்பட மொத்தம் 161 பட்டதாரிகள் தங்கள் பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்றனர்.
PSG & சன்ஸ்’ அறக்கட்டளைகளின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ.எல்.கோபாலகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார்.சென்னை, Axxelent Pharma Science Pvt. Ltd.இன் நிர்வாக இயக்குநரும் தலைமை அறிவியல் அதிகாரியுமான டாக்டர்.சம்பத்குமார் தேவராஜன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையை நிகழ்த்தி பட்டங்களை வழங்கினார்.
PSG பார்மஸி கல்லூரியின் முதல்வர் டாக்டர். எம். ராமநாதன் வரவேற்புரையாற்றினார். பட்டதாரிகளுக்கு பேராசிரியர் டாக்டர்.வி. சிவகுமார் பார்மஸி உறுதிமொழியை வழங்கினார்.துணை முதல்வர் டாக்டர்.வி. சங்கர் நன்றி கூறினார்.