August 21, 2025
தண்டோரா குழு
இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலுக்கு மத்தியில் அமைதியான அதேசமயம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சொகுசு வில்லாக்களை கோவையில்
“ஜிவாந்தா “என்ற பெயரில் மகேஷ்வரி டெவலப்பர்ஸ் அறிமுகம் செய்துள்ளது. அதற்கான துவக்க விழா இன்று நடைபெற்றது.
தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான பிரீமியம் ரியல் எஸ்டேட் நிறுவனமான மகேஷ்வரி குழுமத்தின் ஒரு அங்கமான மகேஷ்வரி டெவலப்பர்ஸ் , இன்று இந்தியாவின் முதல் முழுமையான தானியங்கி வில்லாக்களான
“ஜிவாந்தாவை” கோயம்புத்தூரில் அறிமுகம் செய்துள்ளது.மேம்பாலம் அருகே செட்டி தோட்டத்தில் விரைவில் அமையவிருக்கும் மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கு அருகே அமைந்துள்ளது.
மேலும்,இதனைச் சுற்றி பிரபல பள்ளிகள் , கல்லூரிகள்,மருத்துவமனைகள் மற்றும் ஐடி அலுவலகங்கள்,மால்கள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவை அமைந்துள்ளதால், முதலீட்டாளர்கள்,ஐடி நிறுவன ஊழியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்ற இடமாக இது இருக்கும்.
இந்த முழுமையான தானியக்க வில்லாக்களை நல்லறம் அறக்கட்டளை தலைவரும் சிறப்பு விருந்தினருமான அன்பரசன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.அருண்குமார்,செல்வம் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் நந்தகுமார், இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவரும் ஸ்ரீவாரி பைனான்ஸ் அன்ட் லீசிங் கம்பெனியின் இயக்குனருமான ராஜேஷ் பி லுன்ட்,அகில இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவரும் டெக்கான் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக பங்குதாரருமான கார்த்திக்,கிரெடாய் கோயம்புத்தூர் தலைவர் அரவிந்த் மற்றும் முக்கிய பிரபலங்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் மகேஷ்வரி டெவலப்பர்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர் .
குடியேற தயார் நிலையில் உள்ள இந்த வில்லாக்கள் ஜிஎஸ்டி கட்டணம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து பல்வேறு இடங்களில் இதுபோன்ற வில்லாக்களை கட்டி விற்பனை செய்ய மகேஷ்வரி டெவலப்பர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
ஜிவாந்தா அறிமுகம் குறித்து மகேஷ்வரி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி நிதின் கார்த்திக் கூறுகையில் ,
இந்தியாவின் முதல் முழுமையான தானியங்கி வில்லாக்களுடன் , மகேஷ்வரி டெவலப்பர்ஸ் சர்வதேச தரங்களுக்கு இணையான முன்னோடி மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்தைக் கொண்டுவருகிறது , இது ரியல் எஸ்டேட் பிரிவில் ஒரு புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.
மகேஷ்வரி குழும நிறுவனர் மற்றும் தலைவர் கார்த்திக் சுந்தரசாமி கூறுகையில் ,
மகேஷ்வரி டெவலப்பர்ஸ் , மக்களின் பல்வேறு தேவைகளை மனதில் கொண்டு சிறப்பாக ஜிவாந்தாவை வடிவமைத்துள்ளது , இது அவர்களின் வாழ்நாள் கனவை நனவாக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது இது ரியல் எஸ்டேட் துறையில் மிகுந்த வரவேற்பை பெறும் என்று தெரிவித்தார் .
இதில் சிறப்பு அம்சமாக மோஷன் சென்சார் லைட்டிங் , தண்ணீர் கசிவை கண்டறியும் சென்சார் , தானியக்க அடிப்படையிலான தண்ணீரை சூடாக்கும் எந்திரங்கள் , காபி மேக்கர் , ஓவன் மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட வசதிகள் , மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இல்லாமல் இங்கு இருக்கும் அனைத்து வில்லாக்களுக்கும் நியூமேடிக் நீர் பம்ப் முறையில் தண்ணீர் வழங்கும் வசதி , கியாஸ் கசிவு சென்சார்கள் , நடந்து செல்லும்போது அல்லது படிகளில் ஏறும்போது தவறி விழுந்துவிட்டால் அது குறித்து எச்சரிக்கை செய்யும் சென்சார்கள் , திருடர் எச்சரிக்கை கருவிகள் , வெளிச்சம் மற்றும் வெப்பநிலையை மாற்றக்கூடிய பல்வேறு அம்சங்கள் , மின்சார பிரச்சினை இல்லாத பவர் பேக்அப் மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் மற்றும் மின்சார கண்காணிப்பு கருவிகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
57 சென்ட் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ள இந்த உலகத் தரம் வாய்ந்த சொகுசு வில்லாக்களில் , ஒவ்வொரு வில்லாவிற்கும் இரண்டு பெரிய கார் பார்க்கிங் வசதி உள்ளது.மேலும் இவை ஜெஎஸ்டபிள்யூ எஃகு கம்பிகள் மற்றும் அல்ட்ரா – டெக் சிமெண்ட், செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.இந்த வில்லாவை வாங்கும் ஒவ்வொருவருக்கும் 6 சென்ட் பிரிவுபடாத பங்கு நிலம் அவர்கள் பெயரில் பதிவு செய்யப்படுகிறது.
மேலும் இங்கு 2 ஆயிரம் சதுர அடியில் கிளப் ஹவுஸ் , ஸ்பா மற்றும் அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் திறமையான குப்பை கையாளுதல் அமைப்புகள் என பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.