• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற ஃப்ரீடம் ரன் மாரத்தான்

August 10, 2025 தண்டோரா குழு

வீ வொண்டர் வுமன் “ப்ரீடம் ரன் 5 வது பதிப்பாக கற்பகம் உயர் கல்வி அகாடமி,மற்றும் ப்ராம்ப்ட் இன்ஃபோடெக் இணைந்து,பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம்” எனும் தலைப்பில் நடைபெற்ற இதில்,ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவையில் கடந்த நான்கு ஆண்டுகளாக வீ வொண்டர் வுமன் சார்பாக “ப்ரீடம் ரன் மாரத்தான் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீ வொண்டர் வுமன் “ப்ரீடம் ரன் 5வது பதிப்பு கற்பகம் உயர் கல்வி அகாடமி,மற்றும் ப்ராம்ப்ட் இன்ஃபோடெக் இணைந்து, பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம்” எனும் விழிப்புணர்வு மாரத்தான் கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது.

வீ வொண்டர் வுமன் சார்பாக ஐந்தாவது ஆண்டாக நடைபெற்ற இதில், 10 மற்றும் 5 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளில் மாராத்தான் மற்றும் 5 கிலோ மீட்டர் தூரம் வாக்கத்தான் நிகழ்வும் நடைபெற்றது.

வீ வொண்டர் வுமனின் நிர்வாக அறங்காவலர் சுபிதா ஜஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்ட ஆளுனர் செல்லா ராகவேந்தரன், எலக்ட் கவர்னர் மாருதி,டாட்டர்ஸ் மாவட்ட தலைவர் கவிதா கோபாலகிருஷ்ணன்,வீ வொண்டர் வுமன் டிரஸ்ட் இயக்குனர் சண்முக பிரியா, சைபர் கிரைம் புலனாய்வாளரும் ப்ராம்ப்ட் இன்ஃபோடெக்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சங்கர்ராஜ் சுப்பிரமணியன்,ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.

மேலும் படிக்க