• Download mobile app
27 Jul 2025, SundayEdition - 3455
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிஜிஎஸ் மருத்துவமனையின் கோயம்புத்தூரில் 150 படுக்கைகள் கொண்ட பன்முக சிறப்பு மருத்துவமனை பிரமாண்ட திறப்பு விழா

July 27, 2025 தண்டோரா குழு

பிஜிஎஸ் மருத்துவமனை, புதிய 150 படுக்கைகள் கொண்ட பன்முக சிறப்பு மருத்துவமனையின் பிரமாண்ட திறப்பு விழாவை சனிக்கிழமை, ஜூலை 27, 2025 அன்று நடத்தியது. கோயம்புத்தூர், புதிய சித்தாபுதூரில் அமைந்துள்ள இந்த புதிய வசதி, பொது மக்களுக்கு விரிவான மற்றும் மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது.

இந்த திறப்பு விழா “மகிழ்ச்சி, கவனிப்பு மற்றும் கொண்டாட்டங்கள் நிறைந்த நாள்!” என உறுதியளிக்கிறது. மேலும், அதிநவீன வசதிகளை பார்வையிடவும், அர்ப்பணிப்புள்ள மருத்துவக் குழுவினரை சந்திக்கவும் பொதுமக்களை அழைக்கிறது. இந்த புதிய மருத்துவமனையில் பரந்த அளவிலான சிறப்பு மையங்கள் பல இடம்பெற்றுள்ளன:

இருதய மையம்: அறுவை சிகிச்சை இல்லாமல் இருதய ரத்த குழாய் அடைப்பை சரிசெய்யும் EECP முறை மிகவும் சிறப்பு வாய்ந்தாகவும், இருதய நோயாளிகளுக்கு உகந்த உயர்தர சிகிச்சையாகவும் உள்ளது.

அனுபவப் பிரசவ மையம் (BABYAMA BIRTHING CENTRE): பேபியாமா தத்துவத்தை இணைத்து, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் ஆதரவான சூழலை வழங்குகிறது. சிறந்த குழந்தைகள் சிகிச்சை பிரிவில் கை தேர்ந்தக் குழு அமைக்கப்பட்டு குழந்தை நல மருத்துவர்கள். குடிந்தைக்களுக்கான அறுவைச்சிகிக்சை நிபுணர்கள், அனைத்து தம்பதிகளுக்கான ஆலோசனை மற்றும் குழந்தைக்களுக்கான ஆலோசனை மையமாகவும் செயல்பட்டு வருகிறது.

ஐவிஎஃப் மையம் (VASANTHA FERTILITY CARE & HOSPITALS): வசந்தா கருத்தரிப்பு மையத்தின் மூலம் குழந்தையில்லா தம்மதியினர்க்கு சிறப்பான அதிநவீன தொழில்துட்பம் மூலம் குழந்தைப் பேறு கிடைக்க சிறப்பான மருத்துவார்கள் கொண்ட Hi-Tech முறை மேற்கொள்ளப்படுகிறது.பெற்றோராகும் பயணத்தில் தம்பதிகளுக்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

முடி மாற்று அலகு (REVAMP Hair transplant center): மேம்பட்ட முடி மாற்று நடைமுறைகளில் நிபுணத்துவம் பெற்ற முடிமாற்று மையம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது.

அதிநவீன உள்நோயாளிகள் வசதிகள்: அனைத்து நோயாளிகளுக்கும் வசதியான அறைகள் மற்றும் சிகிச்சை அளிக்கபடுகிறது.

பிஜிஎஸ் மருத்துவமனையின் இயக்குனர், “கோயம்புத்தூர் மக்களுக்கு எங்கள் புதிய பன்முக சிறப்பு மருத்துவமனையின் கதவுகளைத் திறப்பதில் நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமாக இருக்கிறோம். நோயாளியை மையமாகக் கொண்ட கவனிப்பு, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் இரக்கமுள்ள அணுகுமுறை ஆகியவற்றில் கவனம் செலுத்தி உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவையை வழங்குவதே எங்கள் நோக்கம். இந்த 150 படுக்கைகள் கொண்ட வசதி, சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்,” என்று கூறினார்.

துவக்க விழாவில் மருத்துவர்கள் பிரபு, வித்தியாலக்ஷ்மி, அஷ்வின் சன்கமேஷ் – இயக்குனர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க