• Download mobile app
21 Jul 2025, MondayEdition - 3449
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி

July 21, 2025 தண்டோரா குழு

கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 50க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் விளையாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

கோவை வைசியாள் வீதி பகுதியில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.இதன் கும்பாபிஷேக பெருவிழா மற்றும் மண்டல பூஜை கடந்த 7ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக விழாக்கு பிறகு தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.

இந்த 48 நாளும் பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதில் பன்னிரண்டாவது நாளான நேற்று ஸ்ரீ ராகு துர்கா சங்கம் சார்பில் மகிழ்வித்து மகிழ் என்ற விளையாட்டு போட்டி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. கோயிலின் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 50 வகையான போட்டிகள் மற்றும் இரண்டு மெகா போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு விதமான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை 3 வயது வியானிகா வெங்கடேஷ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ராணி விஜயகுமார், மகேஸ்வரி சுரேஷ்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் படிக்க