July 16, 2025
தண்டோரா குழு
உலகம் முழுவதும் நாம் தினமும் ஏற்படுத்தி வரும் மாசு காரணமாக 2100-ம் ஆண்டுக்குப் பிறகு, பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் போகலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
மாசு இல்லாத இந்தியாவையும் உலகத்தையும் உருவாக்கும் உறுதியான நடவடிக்கையில், நிறுவனர் மனு நீதி மாணிக்கம் தலைமையில் தொலைநோக்கு பார்வை கொண்ட மேக் இந்தியா நிறுவனம் காற்று, நீர் மற்றும் மண் போன்ற அனைத்து முக்கிய மாசுபாட்டிற்கும் ஒரு விரிவான. காப்புரிமை பெற்ற, உலகிலேயே முதன்மையான, நிரூபிக்கப்பட்ட மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தீர்வை உருவாக்கி வெற்றிகரமாக களத்தில் சோதித்துள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது.
இது குறித்து மேக் இந்தியா நிறுவனர் மனு நீதி மாணிக்கம், பொதுமேலாளர் ரமேஷ் ராஜகோபால் ஆகியோர் கூறியதாவது:–
தொழிற்சாலை கழிவுகள், திடக்கழிவுகள், காற்று வெளியேற்றம் அல்லது துர்நாற்றம் வீசும் குப்பைகள் என அனைத்து மாசுபாடுகளுக்கும் காப்புரிமை பெற்ற தீர்வு எங்களிடம் உள்ளது.இந்த தொழில்நுட்பங்கள் DRDO, CSIR மற்றும் SITRA போன்ற முன்னணி இந்திய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளன. அவை ஆற்றல் திறன் கொண்டவை, இதற்கு ரசாயனங்கள் தேவையில்லை.
மேலும் இதை குறைந்த கட்டணத்தில் செயல்படுத்த முடியும். இது ஒப்பிடமுடியாத சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார மதிப்பை வழங்குகிறது. இது அனைத்து மாசுபாட்டிற்குமான ஒரே தீர்வாக இருக்கும். மேலும் இது அப்துல் கலாமின் தொலைநோக்கு பார்வை 2020ஐ நிறைவேற்றும் வகையில் உள்ளது என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கழிவுநீர் நீர் மாசுபாடு, நகராட்சி திடக்கழிவு மேலாண்மை, மேலும் இந்தியாவின் 60 சதவீத நீர்நிலைகள் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை வெளியேற்றத்தால் மாசுபட்டுள்ளன. பொறுத்தவரை குப்பை கிடங்கு அதேபோல் திடக்கழிவை கையாள்வது என்பது மிகப்பெரும் சுமையாக இருந்து வருகிறது. உப்பு கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. இதை மற்றும் கரிம பொருட்கள் காரணமாக ஜவுளி மற்றும் தோல் தொழில்கள் அதிக சுத்திகரிப்பு செலவுகளை எதிர்கொள்கின்றன. இவை அனைத்திற்கும் ஒரே தீர்வை மேக் இந்தியா நிறுவனம் வழங்குகிறது.